மதியம் வெள்ளி, ஆகஸ்ட் 3, 2007
அழுதலின் நிறம்
சாம்பல்நிறக்கனவொன்றில்
கைவிடப்பட்ட வார்த்தைகள்
உன்னிடம் அழைத்துவந்தபோது
நீ பச்சை ஆடை உடுத்தியிருந்தாய்.
உன்னைச் சுற்றிலும்
வயலெட் நிறத்தில்
மழைபெய்துகொண்டிருந்தது.
வெளிர்மஞ்சள் குடையை
மூலையில் கிடத்தி
பிங்க்நிறக்கதவைத்
திறந்து என்னருகே வந்து
என் பழுப்புத் தலைமுடியைக்கோதி
கையழுத்தி,
'நான் உன்னைப் பிரிகிறேன்' என்றாய்.
இப்போது மழை நின்றிருக்கிறது
கதவு அடைத்திருக்கிறது
கனவு உதிர்ந்து
என்னைச் சுற்றிலும் சாம்பல்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்லதொரு கவிதை.
//Vaa.Manikandan said...
நல்லதொரு கவிதை.//
அதேதான் சொல்றன்.
Post a Comment