தார்வீஷ்
இனி உன் கவிதைகளில்
கண்ணியம் பேணு.
நீயினி தெருக்களில் இறங்கிக் கோஷமிட முடியாது.
ஒரு போலிஸ்காரனிடமும்
உதைவாங்கமுடியாது.
உனக்கான நாளை
நீ கொண்டாடமுடியாது.
உன் ஆடைகளைத் திருத்திக்கொள்.
சீக்கிரம் கிழிந்த பட்டன்களைத் தைத்துவிடு.
உன் மீது ஏறிச்
சுழலப்போகிறது பூமி.
உனக்குக் கிடைக்கும் வெகுமதியெல்லாம்
சில முத்தங்கள்,
உச்சமுற்றோ உச்சமற்றோ புணர்ச்சி
சமயங்களில் மடியில் கிடந்து அழும் ஆறுதல்
சமயங்களில் மடியே பிரச்சினையாகி
ஆறுதலுக்காய் அலையும் இருப்பு
சில குழந்தைகள்
காண்டம்
பால்பாக்கெட்
ஆஸ்பத்திரியின் மருந்துநாற்றம்
ரேஷன்கார்டு
ஸ்கூல் அட்மிஷன்
பனியாரக்குடம்
அவ்வளவே.
இனி தாமதமாய்த் திரும்பும்
ஒவ்வொருநாளும் விசாரிக்கப்படுவாய்.
உனது உடலின் வாசனை முகரப்படும்.
பொருப்பற்றுக் கவிதை எழுதமுடியாது.
மரணம் உன்னை நெருங்கிறது தார்வீஷ்.
அதற்குள்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு குடி
எவ்வளவு முடியுமோ
கவிதை எழுது.
அவகாசம் குறுகியது தார்வீஷ்.
சீக்கிரம் உன் இயற்பெயரை ஞாபகப்படுத்திக்கொள்.
மதியம் புதன், ஆகஸ்ட் 15, 2007
தார்வீஷை நெருங்கும் மரணம்
Posted by
சுகுணாதிவாகர்
at
11:58 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ok
- kundalan
Post a Comment