இரக்கமற்றுப் பெய்யெனப் பெய்யும் மழை




ஒரே ஒரு தொடுதல்
கிளர்த்தியிருக்கலாம்
உன்னுள் புதைந்துபோன வசந்தங்களை.
ஒரே ஒரு சொல்
மலர்த்தியிருக்கலாம்
நீ மறைக்க விரும்பும் உன் பொய்களையும் தாண்டி.
ஒரே ஒரு பார்வை
உன் இறுகிய நிலத்தை நெகிழ்த்தியிருக்கலாம்.
எங்கோ பெய்கிறது மழை
பாலத்திணைகளைத் தவிர்த்து.
ஒரே ஒரு முறை
மலைமுகடுகளில் எதிரொலித்து
அடங்கிப்போனது
ஒரு நாடோடியின் பாடல்.