மலையிடுக்குகளில்
கசிந்துகொண்டிருந்தது
ஆதியில் புனையப்பட்ட பாடலொன்று.
பாடலின் விஷம் தெறித்து
நீலம் பாரித்தது வெளி.
விஷமருந்திய போதையின்
வெறியில்
மயங்கி ஆடினர் மாந்தரெல்லாம்.
கைகோர்த்து
கைகோர்த்து
நடந்துமுடிந்த
ஆட்டமுடிவில்
குறிகளின் இடத்தில்
கொம்புகள் முளைத்தது எல்லோர்க்கும்.
கொம்புகளால்
தாக்கத்தொடங்கிய கூட்டத்திடை
தேடிக்கொண்டேயிருக்கிறேன்
புனையப்படாத பாடல்கள் பாடுவோரை.
அவரே நம் சினேகத்துக்குரியவர்.
காட்டாற்றின் கரையிலொரு சருகு
Posted by சுகுணாதிவாகர் at 0 comments
வாய்நிரம்பிக் கொள்ளாது
ததும்பிக்கொண்டிருக்கும்
அருவிநீர்
நேற்றிரவு சுவைத்த
பெருமுலையின் நினைவு.
Posted by சுகுணாதிவாகர் at 0 comments
வெளிப்பாடு
ராணியின் இடுப்பு
எதிர்வீட்டுக்கனகாவின்
வியர்வையில் பளபளக்கும் பின்னங்கழுத்து
பேருந்து ஓரத்தில் கையுயர்த்தி அமர்ந்திருந்த
கிராமத்துப்பெண்ணின்
வெளித்தெரியும் மார்புகள்
கல்லூரிப்பெண்ணின் சுடிதாரில்
ஒருநிமிட உற்றுநோக்கலில்
உறுத்தும் காம்புகள்
நேற்றுமுதல்நாள் பார்த்த
வட்டமிடப்பட்ட முதலெழுத்துத் திரைப்படத்தின்
புணர்தல் காட்சி
ஒரு விழாநாளின் மறுநாளில்
சீருடையல்லா வேறுடையணிந்த
பள்ளிமாணவியின்
மிதிவண்டி இருக்கைக்குப்
பிதுங்கித்ததும்பும்
பின்புறங்கள்
இது அல்லது இதுபோன்ற
ஏதேனுமொரு நிகழ்வின் எதிர்விளைவாய்க்
கற்பனையோடு
பொருதி
முடியாதிருக்க வேண்டும் ஆவலுக்கும்
முடிக்க உந்தும் முயற்சிக்குமிடையில்
முடிந்தே தீர்ந்தது.
என்றபோதினும்
எஞ்சிநிற்குமொரு போதாமை
சுய இன்பம் போலவே கவிதையும்.
Posted by சுகுணாதிவாகர் at 4 comments
சுழி
கடல் பார்த்ததும் புன்னகைக்கிறேன்.
எங்கிருந்து தொடங்கியது இது?
பார்த்தவுடன்
இதழ்பூக்கும்
உன் புன்னகையிலா?
Posted by சுகுணாதிவாகர் at 0 comments
other is hell
தண்டவாளக் கம்பிகளின்மேல்
நெடுந்தூரம் நடந்துபோகிறோம்.
வக்கிரங்களை எழுதிப்பார்க்கிறோம்
அல்லது வரைந்துபார்க்கிறோம்.
ஆடைகளைந்து நிர்வாணமாகிறோம்.
தற்கொலை கொண்டாடுகிறோம்.
எல்லோர் மனதிலும்
அடிக்கடி எழும் கேள்வி.
என்னருகிலிருப்பவன்
எப்போது எழுந்துபோவான்?
Posted by சுகுணாதிவாகர் at 1 comments
விகிதங்கள்
எதிர்வீட்டு வாயிற்படியில்
மருமகளுக்குப்
பேன் பார்த்துக்கொண்டிருந்தாளொரு பெண்.
இழவுவீடு சென்று
குளிக்காமல்
உள்நுழைந்ததற்காய்ப்
பெருங்கூச்சலிட்டாள் மனைவி.
சலூன்கடையில் பார்த்த
ஜான்கென்னடி புகைப்படத்திற்கு
குங்குமம் வைக்கப்பட்டிருந்தது.
திரும்பிப்பார்த்த எனக்குத்
திகீரென்றது.
சபரிமலைக்கு
மாலை போட்டுவந்திருந்தார்
போஸ்ட்மாடர்னிஸ்ட்
(என்று சொல்லிக்கொண்ட)
யவனிகா.
Posted by சுகுணாதிவாகர் at 3 comments
ஒரு புலியைப் பிரசவித்த
ஆயாசத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்த
உன் முலைக்காம்புகளில்
வேர்விட்டுத் துளிர்த்திருந்தன
சின்னஞ்சிறுதளிர்கள்.
பிடிமானமற்று அலையும்
பூமிப்பந்தின் தாகம் தணிக்க
உடையுன் பனிக்குடம்.
Posted by சுகுணாதிவாகர் at 0 comments
?
சொல்லைத் தவிர்த்துச்
சொல்ல முடியவில்லை
ஒரு சொல்கூட..
என்றபோதும்
சொல்லமுடியுமா, சொல்
உன்போலொரு
அழகான சொல்.
Posted by சுகுணாதிவாகர் at 1 comments
சார்வு
பூ விழுந்த ஒசைதாங்காது
பூமி உடைந்தது.
உடைந்த பூமியின்
ஒருபகுதி
போய்சேர்ந்தது
பிரபஞ்சத்தின் கண்களில்
தூசியாய்.
சுற்றிச்சுழன்றடிக்கும் ஒரு பேய்க்காற்றில்
வலம் வந்த பூமி இடம் மாறிப்போகலாம்.
நடைபாதையின் இருப்பவனின்
பயமெல்லாம்
வானம் தன் தலையில்
விழாமலிருப்பது குறித்தே.
Posted by சுகுணாதிவாகர் at 2 comments
கவின்
பூக்களை நிரப்பிக்கொண்ட கவிதைகள்
மனசாட்சியற்றவை.
எவரேனும் எழுதுங்களேன்
தலைகுப்புற வீழ்ந்து
தலைமோதிச்சிதறும்
மரணத்தின் அழகினை.
---------
என்ன எதிர்பார்த்து
நிலா ஒளியுமிழும்?
எவரின் ரசிப்பிற்காய்
மலர் பூக்கும்?
மீண்டும் மீண்டும் விழுவேனுன்
எழில்நுதலிலொரு மழைத்துளியாய்
நெற்றிதுடைத்து நீ
நிலத்தில் எறிந்திடினும்...
--------
Posted by சுகுணாதிவாகர் at 0 comments