காமன்மேன்களின் கவனத்திற்கு...













அதுவொரு கொண்டாடப்பட வேண்டிய காதலர்தினம்தான்
பிப்ரவரி 14,1998.
நானும்கூட கல்லூரியின் இரண்டாமாண்டில்
கொண்டாடிக்கொண்டுதானிருந்தேன்.
அதேநாளில்தான்
அயோத்தியிலிருந்து கோவைக்கு
மரணத்தை அழைத்து வந்திருந்தார் அத்வானி.
மரண வெடிப்பில்
சதைத்துணுக்குகள் சிதறிக்கிடந்தன.
குண்டுவெடித்ததாய்க்
கைது செய்யப்பட்டோரில்
22 பேரின் ஆயுள்தண்டனையை
நேற்றுதான் ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம்.
இந்தியாவில் பொதுவாக ஆயுள்தண்டனை 14 ஆண்டுகள்.
22 பேர் சிறையில் இருந்ததோ 11 ஆண்டுகள்.
இழந்துபோன காலத்தை
தலைமுறைக்கு மாற்றப்பட்ட கொலைப்பழியை
இன்னமும் கண்களில் மிச்சமாய்
உறைந்திருக்கும் அவநம்பிக்கையை
யார் சரிப்படுத்தப்போவது
நீங்கள் அல்லது நான்?
உங்களது அல்லது எனது குழந்தை?
அத்வானி அல்லது பாரதமாதா?
மன்னிக்கவும் இது கவிதையாய் வரவில்லை.
நான் கவிதை எழுதவும் வரவில்லை.
அவர்களிடம் துப்பாக்கி இருக்கிறது.
அவர்களிடம் போலீஸ் இருக்கிறது.
அவர்களிடம் அரசு இருக்கிறது.
அவர்களிடம் செய்திகள் இருக்கின்றன.
மன்னிக்கவும் மீண்டும் மீண்டும்
ஒரே வார்த்தையை உளறிக்கொண்டிருக்கிறேன்.
அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது.
என்னிடம் என்ன இருக்கிறது?
வார்த்தை...
கவிதையாய்க் கூட மாறமுடியாத வார்த்தை.
நல்லது கனவான்களே.
அந்த 22 பேரையும் வேனில் ஏற்றி
பொட்டல்காட்டில் இறக்கிவிடுங்கள்.
இந்த கவிதை எழுதியதற்காய்
23வதாய் என்னையும்.
ஒருநிமிடம், இந்த கவிதையை
யாரேனும் ஆதரிக்கக்கூடும்.
24வது...
25வது...
................
............
கண்களைக் கட்டி சுடத்துவங்குங்கள்.
இப்போது உங்கள் கவுண்ட் டவுன் தொடங்கட்டும்.
10
9
7
8
6
.
.
.
.

கடவுளைக் குதப்புணர்ச்சி செய்துகொண்டிருந்தபோது அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்திகள்

எனக்கு கடவுள் கிடைப்பதற்குள்
சில நூற்றாண்டுகள் ஆகியிருந்தன.
ஏனெனில் கடவுளைப் புணர்வதற்காய்க்
காத்திருப்போர் பட்டியல் நீளமானது.
தெய்வீக லாவகத்தோடு
தன் புட்டங்களை உயர்த்திய கடவுள்
ஒட்டகத்தைப் போலிருந்தார்.
யுகங்களைத் துளைத்து
என் குறி கடவுளின் குதத்தைத் துளைத்தபோது
வலிதாங்காது கடவுளின் கன்னங்களில்
கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
கடவுளை அழவைக்கிறவனே பாக்கியவான்.
ஒரு சிறுகுழந்தையைப் போன்ற
அந்த மெல்லிய விசும்பல்
கடவுளை விட அழகானதும் உண்மையானதும்கூட.
முன்னும் பின்னுமாய் இயங்கி
கடவுள் மீதேறி
புணர்ச்சியின்வழியே நான்
திரேதாயுகத்தைக் கடந்துகொண்டிருந்தபோது
என் அலைபேசி அலறியது.
யூதக்குழந்தைகள், வியட்நாம் பெண்கள்,
ஈராக்யுவதிகள், ஈழத்துக்கொலைநிலம்,
ரத்தம், யோனி, மூர்க்கம், அத்துமீறல்,
நிர்வாணம், பீய்ச்சியடிக்கும் திரவங்கள் என
எம்.எம்.எஸ்கள்
என் புணர்ச்சியின் சமநிலையைக்
குலைத்துப்போட்டன.
கடவுள் பதற்றமடைந்தார்.
அனேகமாய் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட
எம்.எம்.எஸ் வந்தபோதுதான்
பெருவிரலை உயர்த்தி
தன் புட்டத்தை வாகாக கடவுள்தூக்கிக்கொடுத்தார்
என்று நினைக்கிறேன்.
கச்சினப்பள்ளி துடிமூயேயின்
தளர்ந்த மார்பகங்களைப்
பச்சைவேட்டைக் கரங்கள் அரிவதான
எம்.எம்.எஸ் வந்தபோது
என் அலைபேசியை
சைலண்ட் மற்றும் வைப்ரேஷன் மோடிற்கு
மாற்றும் முடிவுக்கு வந்தேன்.
அதற்குள் கடவுளின் குதத்தில்
நூற்றாண்டு சிலந்தி படிந்திருந்தது.
இந்த இடைவெளியில்
ஒபாமாவின் நோபல் குறித்த
குறுந்தகவல்கள் வராது தவறியிருக்கலாம்.
கடவுளின் குதம்விரித்து
கலியுகத்திற்குள் நுழைவதற்குள்
மீண்டும் அலைபேசி
வைப்ரேஷன் மோடிலேயே ஓசை எழுப்பியது.
அந்த ஓசை
முதன்முதல் கேட்ட
கடவுளின் விசும்பலைப் போல இருந்தது.


பச்சைவேட்டை - மத்திய இந்தியாவில் ‘மாவோயிஸ்ட்களை வேட்டையாடுவது’ என்ற பெயரில் பழங்குடி மக்களின் எதிர்ப்புணர்வை ஒழிப்பதற்காக இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை.

துடி மூயே (70) - சட்டீஸ்கரில் உள்ள கச்சான்பள்ளி என்னும் கிராமத்தில் இந்திய அரசு மேற்கொண்ட பச்சைவேட்டையின்போது துடிமேயே என்னும் 70 வயது பெண்ணைக் கொன்றது மட்டுமில்லாமல், அவர் பிணமான பிறகு அவரது மார்பகங்களை அறுத்து அகற்றியது பாதுகாப்புப்படை.

நீ உன் கொலைவாளை உருவுவதற்கு முன்பு சற்று நிதானித்திருக்கலாம்.













உனக்கும் எனக்கும்
மத்தியில் இருந்தது ஒரு சொல்.
ஒரே சொல்.
அந்த சொல் ஒரு கொலைவாளாய் மாறியபோது
திடுக்கிட்டுத்தான் போனேன்.
வாளின் முனையில்
வன்மத்தின் விஷம் வேறு தடவியிருந்தாய்.
என் கழுத்தின் மேல்
உன் கொலைவாள் உயர்ந்தபோது
நான் மெய்யாலுமே அழுதேன்.
எந்த நரம்பு அறுத்தால் உயிர் அறுபடும்
என்னும் கொலைச்சூத்திரம் தெரியாத
உன் பேதமை குறித்து.
உன்னிடம் இல்லாது
என்னிடம் இருப்பது ஒரு குழந்தை.
உன் சொல்லைப்போலவே
ஒரே குழந்தை.
அந்த குழந்தை உன் வாளின் கைப்பிடியைப்
பலூனாய் மாற்றிவிடும் சாத்தியம் கொண்டது.
இப்போது உன் வாளின் முனையில்
என் குழந்தையின்
கண்ணீரும் சிறுநீரும் வேறு கலந்திருக்கிறது.
நான் உன் வாளிடமிருந்து தப்பிப்பதற்காக இதைச் சொல்லவில்லை.
உண்மையாகவே விஷத்தை விட அடர்த்தியானது
ஒரு குழந்தையின் மூத்திரம்.
நாளை அது உன்னோடு சினேகித்து
மதுவருந்தும் சாத்தியம் உண்டுதானே

(நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதிய இந்த கவிதையைப் போதையில் போனில் சொன்னபோது பொறுமையாய்க் கேட்டவர்களுக்கும் என் மகன் கத்தார்நவீன்சித்தார்த்துக்கும்)

இந்த நூற்றாண்டின் முதல் கவிதை









காலமற்ற காலத்தின்
அகால மார்பில்
வடுக்கள் மறையவில்லை.
வற்றித்தான் போய்விட்டது
உள்ளங்கை பிசுபிசுப்பில்
ஊறிய நதி.
ஊனமுற்ற தேவதைகளே
சினேகிக்க கிடைக்கிறார்கள்.
மதியவெறுமை அடிக்கிறது தினசரி.
சாரமற்றுக் கிடக்கிறது வாழ்க்கை.
சம்பிரதாயமாய் வரவேற்றுவைப்போம்.
இந்த நூற்றாண்டு
எதை விழுங்கி வயிறுபுடைக்குமோ?
எப்படியாயினும் என் இனிய சோதரி,
உன்னைப் பழகியும் இழந்தும் போன
போன ஆயிரமாம் ஆண்டு
இன்னமும் இருக்கத்தான் செய்கிறது
உன் முழங்கைத்தழும்புகளை நினைவூட்டி.

                    (01.01.2000)

யோனிவாசல்

எனக்கு மட்டுமல்ல
வீடு அல்லது வீடுகளற்ற
எவருக்குமே இருக்கத்தான் செய்கிறது
வாசல்களைத் தரிசிக்கும் தாகம்.

மறைத்துக்கட்டப்பட்ட
மதில்சுவர்களே
நம் யூகங்களை எழுப்பிப் பார்க்கின்றன.
எட்டிப்பார்க்க இயலாதவர்களில் சிலர்
மதில் தாண்டிக் குதித்துவிடலாம்.

நினைவுகளெங்கும் நெளிந்துகொண்டிருக்கின்றன
வாசல்கள்.

வாசல்கள் பற்றி
எனக்கேதும் தெரியாது.
ஆனாலும் ஒன்றை
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
நான் வாசல்வழியாகவே
வந்திருக்கிறேன்.

                (2000)

யோனியில் முளைத்த குறுவாள்

இறக்கைகள் அறுந்துவீழ்ந்த
தேவதையொருத்தியை
எடுத்து வளர்த்தேன்.
நிலவின் சுவர்களில்
எழுதப்பட்ட பாடலைப்
பாடிக் காட்டுவாளெனக்கு.
காலை எழுகையில்
என் மார்புக்காம்புகளில்
பனியொத்த முத்தம் ஈவாள்.

செடிகளில்
பட்டாம்பூச்சிகள்
பறித்துத் தருகிற அவளைப்
படுக்கையில் தள்ளி
வலுக்கட்டாயமாய் என் குறியைத்
திணித்தபோதுதான் பார்த்தேன்
அவள் யோனியில் முளைத்திருந்தது
குறுவாளென்று.

                நன்றி : சனதருமபோதினி 2001.

மிருகம்








ஒரு முத்தத்தைத் தந்து

என்னை அபகரித்துப்போனாய்.
என் இறைச்சியின் கொதிப்படங்கும் முன்னரே
உன் வேட்டை முடிந்துவிடுகிறது.
கரையோரத்தில்
ஒற்றைத்தூண்டிலோடு

காத்திருக்கும் நீ ஆழங்களில் அமிழ்ந்திருக்கும்

ரகசியங்கள் பற்றிக் கவலையற்றிருக்கலாம்.

ஆனால் ஒருபோதும்

வெல்லமுடியாத என்னை
உன் மொழியால் ஆண்டதாய்ப்
பெருமிதம் கொள்ளும் உனக்கு
கனவுகளில் தீர்த்துக்கொள்ளும்
என் வஞ்சமே பதிலாயிருக்கும்.

கணவன் என்ற மிருகம்
















விசாரிப்புகள் ஏதுமற்று
அருகில் படுத்துக்கொண்ட
உன் கரங்கள்
என் இராவுடையைத் துளைத்துக்கொண்டு
நெளிந்து தீர்கின்றன.
வட்டுடையின் கொக்கியைக்
கழற்றவும் அவகாசமற்ற
உன் தீவிரத்தால்
தனங்களில் அரும்பிநிற்கின்றன
உன் பதிவின் கசப்பாய்
சில ரத்தத்துளிகள்.
எல்லாம் முடிந்து எழுந்த நீ
உணவு மேசையில்
உருட்டிய பாத்திரங்கள்
வந்து விழுந்தன
என் செவிப்பறையின் மெல்லியபுலன்களில்.
ஒரு ஆணுறை போலவே
என்னைப் பொருத்தியும்
கலைத்தும் போட்டு
களைப்பினூடாய் நீ உறங்கியபிறகுதான்
எனக்குப் பசித்தது.

பஞ்சமனின மொழியில்











வயிறுவெடித்துப் பிணங்கள் மிதக்கும்
கங்கைநீர் தெளித்து புனிதப்படுத்துவீர்
உன் கக்கங்களின் மயிர்சிரைத்து
ஆடைகளின் அழுக்ககற்றி
சிதைந்துபோன உங்கள்
செருப்புகளைச் செப்பனிட்ட
எமதால் தொடப்பட்ட இடங்களை.
பல்லிமூத்திரத்தால் வீச்சமடிக்கும்
கர்ப்பக்கிரகத்தின் இருட்டுமூலையில்
பொருள்புரியா பார்ப்பானின்
மந்திரமுணுமுணுப்பு செவிமடுத்திருப்பது
உன்னைப் பொறுத்தவரை சாமி.
எனக்கு அது என்
துரட்டியில் அள்ளித்
தூரக்கொட்டப்படும் மலம்

மண்
















அவர்கள் வாழும் மண் உங்களுடையதா
அல்லது நீங்கள் வாழும் மண் அவர்களுடையதா
அல்லது
பொதுவாக நீங்கள் இருவரும் வாழும் மண்
யாருடையது என்பது குறித்த ஆய்வுகள்,
விவாதங்கள்,கருத்துரைகள்
தயாரிக்கப்படுகின்றன உங்களால்,
அவர்களாலும்கூட
மண்ணில் பொதித்த கண்ணிவெடியால்
சொச்சம் முதியவர்களைக் கொன்றீர்கள்..
அவர்கள் விண்ணிலிருந்து மண் நோக்கிப்
பொழிந்த குண்டுகளால்
சொச்சம் பிஞ்சுகளைக் கொன்றார்கள்.
எப்படியாயினும் பிணங்கள்
போகப்போவது மண்ணிற்குத்தானே.
(மண்ணிலிருந்து காணாமல் போனவர்களின் பட்டியல் தனி)
ஒவ்வொரு மண்ணும் கைப்பற்றும்போதோ
அல்லது மீட்கப்படும்போதோ
அழிவதென்னவோ மாற்றினத்து
பெண்ணுடல்கள்தான்.
யோனி மூடிய மண்
பெண்
மண்
பூமிமாதா
உங்கள் மண்ணிற்கான பேச்சுவார்த்தைக்கு
அயல் மண்ணிலிருந்து தூதுவர்கள் வருவார்கள்.
நீங்களோ எதிரியோ
வெற்றி பெறும்போது
கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் மண்ணை
அவர்களுக்கு விற்கத்தொடங்குவீர்கள்.
இன்னமும் உங்களுக்கு மண் மீதுதான் பிரியம் எனில்
சில பொட்டலங்களில் சேகரித்துக்கொள்ளுங்கள்.
பலவற்றிற்கு அவை பயன்படும்.
துப்பாக்கி ரவைகள் தயாரிக்க
தேனீரில் கலந்து குடிக்க
முகாம்களுக்கான அடித்தளம் அமைக்க
சில நேரங்களில் பிணங்களின் வாய்களை மூடவும் கூட

கதைசொல்லல்


ம்..
என்று சொல்லிச்
சென்ற
கூட்டத்தின் நடுவில்
ஏன்
என்று கேட்ட
ஒற்றைக் குரல்
மட்டுமே உயிர்ப்பானது.

அழுகலின் சுயம்


"இந்த பூமி
கடவுளின் விதைப்பையைப் போல‌
இருக்கிறது" என்றான் வர்மன்.
''ஆம். வீக்கம் வந்த‌
கடவுளின்..." என்றாள் யாழி.