தனித்திருக்கும் பறவை





வானற்று ஏதும் அறியாது பறவை.
பறவைக்கு ஒரே வான்.
வானுக்கோ பறவைகளில் ஒன்று.
வான் என்பது விரிந்தது
என்றது பறவை.
இறுதியில் தெரிந்தது
வான் என்பது விரிந்த வெளி...
விரிந்த ஒன்றுமற்ற வெளி.
இப்போது பறவை பறக்கிறது
வானைத்தாண்டி.