துப்பாக்கிகளை புதைத்து
துப்பாக்கிகளை விதைத்து
துப்பாக்கிகளை அறுவடை செய்யும்
துப்பாக்கிதேசத்தில்
எப்போதேனும் பெய்கிறது மழை
நீராய்
ரத்தமாய்
உடல்களாய்
சொற்களாய்
கண்ணீராய்......