கவின்

பூக்களை நிரப்பிக்கொண்ட கவிதைகள்
மனசாட்சியற்றவை.
எவரேனும் எழுதுங்களேன்
தலைகுப்புற வீழ்ந்து
தலைமோதிச்சிதறும்
மரணத்தின் அழகினை.

---------

என்ன எதிர்பார்த்து
நிலா ஒளியுமிழும்?
எவரின் ரசிப்பிற்காய்
மலர் பூக்கும்?
மீண்டும் மீண்டும் விழுவேனுன்
எழில்நுதலிலொரு மழைத்துளியாய்
நெற்றிதுடைத்து நீ
நிலத்தில் எறிந்திடினும்...


--------

0 comments: