எதிர்வீட்டு வாயிற்படியில்
மருமகளுக்குப்
பேன் பார்த்துக்கொண்டிருந்தாளொரு பெண்.
இழவுவீடு சென்று
குளிக்காமல்
உள்நுழைந்ததற்காய்ப்
பெருங்கூச்சலிட்டாள் மனைவி.
சலூன்கடையில் பார்த்த
ஜான்கென்னடி புகைப்படத்திற்கு
குங்குமம் வைக்கப்பட்டிருந்தது.
திரும்பிப்பார்த்த எனக்குத்
திகீரென்றது.
சபரிமலைக்கு
மாலை போட்டுவந்திருந்தார்
போஸ்ட்மாடர்னிஸ்ட்
(என்று சொல்லிக்கொண்ட)
யவனிகா.
மதியம் ஞாயிறு, ஜனவரி 20, 2008
விகிதங்கள்
Posted by
சுகுணாதிவாகர்
at
11:40 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கடைசி பத்தி சூப்பர்!
ஹூ ஈஸ் எவனிகா ?
யவனிகா சிறீராம் ஒரு கவிஞர். சில பதிவுகளில் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்.
Post a Comment