தீ














கக்கங்களைச் சிரைக்கும்
நாவிதரின் நுட்பம் வாராதுபோனால்
புணர்ந்துகொண்டிருக்கும்
நாய்களின்மேல்
கல்லெறிவதாயிருக்கட்டும்
இக்கவிதை.
-------------
என்மனசு இருட்கிடங்கு.
ஒருநாள் வெடிக்க
ஒளியாய்ச் சிதறினேன்.

-------------

தீக்கங்கைத் தின்றபடி
தெருவெங்கும் அலைகிறதொரு மிருகம்.
மாகாளி மீதுகண்வைத்தபடி.
ஜகத்தினை அழிக்கவேண்டியதுதான்.
அக்கினிக்குஞ்சுமில்லை
பொதிந்துவைக்க
பொந்துமில்லை.

---------------
.

1 comments:

Anonymous said...

கக்கங்களைச் சிரைக்கும்
நாவிதரின் நுட்பம் வாராதுபோனால்
புணர்ந்துகொண்டிருக்கும்
நாய்களின்மேல்
கல்லெறிவதாயிருக்கட்டும்
இக்கவிதை.


Ithuthaan "thee"