சிறுநீர் கழித்த தடயம்





















பலராலும் எச்சில்படுத்தப்பட்ட
சொல்லொன்றே
எனக்குப் பெயராய்
இடப்பட்டிருக்கிறது.
பறவைகள் கூடுதிரும்பும் சாயங்காலப் பொழுதொன்றில்
எவராலும் அழைக்கப்படாத பெயரை
எனக்கு நானே சூட்டிக்கொள்வேன்.
ஒரு சொல்லே
நானாய் உணரப்படும் கணம்
ஒரு தீக்குச்சியின் முனை
கருகிய வாசம்.

0 comments: