நெஞ்சொடு கிளத்தல்













பாம்புகள் புரளும் படுக்கையில்
புரண்டுபடுக்காதே, ஏதேனும்
பட்டாம்பூச்சிகள் சாகக்கூடும் யதி.
கடற்கரையின் மணல்பரப்பில்
பதிந்திருந்த காலடிச்சுவடுகளை
மட்டுமே கணக்கெடுக்கிறாய்
உடைந்துசிதறிய நத்தையோடுகளை
என்ன செய்யலாம் யதி?
கைகள் கோர்த்துத் திரிந்த
கடற்கரையில்லையிது.
எப்போதோ தட்டுத்தடுமாறிய
ஒரு பாய்மரக்கப்பல்
கரைசேரத்தவித்ததொரு கரை.
நினைவிழந்து சிதறியநாட்களில்
உனது அலை சற்றேனும்
எனை நனைத்துச்செல்லவில்லை.
வன்மத்தின் கொலைநாட்களில்
யாருமற்று விசும்பியநாட்களிலும்
உனதுகடலை உன்
ஜன்னலைத் தாண்டிப் பாய
அனுமதிக்கவில்லை.
எங்கோ என் பிணம் மீதேறி
நடந்துசென்றவனின் கண்ணீர்
கடலாய்ப் பாவிப்பரவுகிறதா யதி?
நம்பமுடியவில்லை
நீ என்னைக் கைவிட்டுச்சென்றுவிட்டாயென.
உன் ஆறுதல்
உன் எழுத்து
உன் புன்னகை
உன் கண்ணீர்
இப்படியான உனதுகள்
எனக்கு அருளப்படாதபோதும்
அது என்னிடமிருந்து பறிக்கப்பட்டதையும்
சிரித்துக்கொண்டே நீ காறியுமிழ்ந்ததையும்.
ஆனால் இன்னமும் நம்பமுடியாதைவைகளின்
பட்டியல்களை விவரிப்பததெதற்கு யதி?
உன்னைப் பிரிகிறேனென்னும் நினைப்பே வலிக்கிறது.
ஆனால் உன்னோடிருப்பது அதைவிடவும்...

0 comments: