சாத்தப்பட்டுக்கிடக்கின்றன கதவுகள்.
ஒலியெழுப்பி உரக்கத்தட்டாதிருக்கட்டும் உங்கள் கரங்கள்.
ஏற்கனவே தென்றலொன்றுநுழைந்ததன்
சாட்சியமாய்ப்பூவொன்று
கலைத்துப் போடப்பட்டிருக்கிறது.
இன்னொருமுறையும்தென்றல் உள்நுழையலாம்.
கட்டிடத்தின்விரிசல்
இடுக்குகளெங்கும்வேர்விட்டுத் தலைநீட்டி...
உதிர்வதற்காகவேகாத்துக்கிடக்கின்றன
பூக்கள்.
சாத்தியங்கள் மரணிக்கும்
ஒரு கொடுமழையின் பின்னிரவில்
இடிந்துகொண்டிருக்கிறது வீடு.
எப்படியிருந்தாலென்ன கதவுகள்...
மூடப்பட்டோ சாத்தப்பட்டோ...
4 comments:
//ஏற்கனவே தென்றலொன்றுநுழைந்ததன்
சாட்சியமாய்ப்பூவொன்று
கலைத்துப் போடப்பட்டிருக்கிறது.
இன்னொருமுறையும்தென்றல் உள்நுழையலாம்//
யப்பா! எப்படி இப்டியெல்லாம்?
ம்ம்ம்... ரெண்டுவாரமா முன்நவீனத்துவ வாதிகள் எல்லாம் நிம்மதியா இருந்தோம்... இப்போ மறுபடியும்...
exrtodinary!!!
ஐய்யா சத்தியமா அர்த்தம் புரியல.
என்ன சொல்ல வறீங்க?
Post a Comment