ஆண்விடாய்

வாஷ்பேசினில் மிதந்து கொண்
டிருக்கின்றன சிகரெட்துண்டுகள்.
மலமெங்கும் மதுநாற்றம்.
சதா முணுமுணுக்கும்
தகப்பனின் கழுத்தை
நெறிக்கவேண்டுமாயிருக்கிறது.
குறிமுனையில்
சிகரெட்டை நசுக்கவேண்டும்.
சன்னல்வழி வெறித்துப் பார்க்கிறேன்
பெண்நாயின் குதத்தை
முகர்ந்து பார்க்கிறது ஆண்நாய்.

யோனியில் முளைத்த குறுவாள்

இறக்கைகள் அறுந்து வீழ்ந்த
தேவதை ஒருத்தியை
எடுத்து வளர்த்தேன்.
நிலவின் சுவர்களில்
எழுதப்பட்ட பாடல்களைப்
பாடிக்காட்டுவாளெனக்கு.
காலை எழுகையில்
மார்புக்காம்புகளில்
பனியொத்த முத்தமீவாள்.
செடிகளில் பட்டாம்பூச்சிகள்
பறித்துத் தருகிற அவளை
வலுக்கட்டாயமாய்ப்
படுக்கையில் தள்ளி
குறியைத் திணித்தபோதுதான்
பார்த்தேன்
அவள் யோனியில்
முளைத்திருந்தது
குறுவாளொன்று.

தீ














கக்கங்களைச் சிரைக்கும்
நாவிதரின் நுட்பம் வாராதுபோனால்
புணர்ந்துகொண்டிருக்கும்
நாய்களின்மேல்
கல்லெறிவதாயிருக்கட்டும்
இக்கவிதை.
-------------
என்மனசு இருட்கிடங்கு.
ஒருநாள் வெடிக்க
ஒளியாய்ச் சிதறினேன்.

-------------

தீக்கங்கைத் தின்றபடி
தெருவெங்கும் அலைகிறதொரு மிருகம்.
மாகாளி மீதுகண்வைத்தபடி.
ஜகத்தினை அழிக்கவேண்டியதுதான்.
அக்கினிக்குஞ்சுமில்லை
பொதிந்துவைக்க
பொந்துமில்லை.

---------------
.

கனா

















நேற்றிரவு நீலமாய்
வந்ததொரு கனவு.
கனவின் நீலம் இமைகளில் விரிந்தவேளை
கனவினின்று
வெளிப்பாய்ந்தது முயல்குட்டி.
படுக்கை முழுதும்
பச்சைப்புல்வெளி.
கதகதப்பாயிருக்கிறது
முயலின் அருகாமை.

தலையூழி















மலைப்பாம்பின் வயிறுகிழித்து
துள்ளிக்குதிக்கிறதொரு ஆட்டுக்குட்டி.
வெடித்துச்சிதறுகிறது நடுகல்லொன்று.
நாவாயை நிறைத்து
நுரைக்கிறது அலை.
பூமியை ஒரு பந்தாய்ச் சுருட்டி
தன் தீட்டுத்துணியில்
ஒளித்துவைக்கிறாள் பூதகி.

தேவையற்ற மன்னிப்பு

ஒவ்வொருமுறையும் மன்னிப்பு
கேட்கிறேன்.
எனில்
ஒவ்வொருமுறையும் தவறு செய்கிறேன்.
இம்முறை
மன்னிப்பு வேண்ட விரும்பவில்லை.
வெட்கங்கட்டுக்கிடக்கிறது
நானும் என் மன்னிப்பும்.

அரவபதம்















மதுவின் விஷம் மாறி
உன் கோப்பையை நிரப்பத்தொடங்கியபோது
அனேகமாக அது
நள்ளிரவின் முன்னிரவாயிருக்கலாம்.
ஒவ்வொரு ஜன்னல்களாய்ச்
சாத்தப்பட்டுக்கொண்டிருந்தன.
விடுதியறையின் ஏதோ ஒன்றில்
அணைக்கப்படாத சிகரெட்
படுக்கைவிரிப்பைப் பொசுக்கியிருந்தது
மழையில் நனைய நாய்கள் தயாராயில்லை.
பிணத்தை ஏற்றிக்கொண்டிருந்த
ஊர்தியொன்று விரைந்தது.
விருப்பமுற்றோ அற்றோ
உடனுறைந்தனர் பெண்கள்.
நானோ குறுஞ்செய்திகளென
சில பாம்புகளை
உனக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன்.
உன் மென்னுடல் தீண்டிப்
பசியழித்த அரவங்கள்.
மதுதெளிந்த காலை
என் பாம்புகள் சிலவற்றை
எனக்கே அனுப்பிவைத்தாய்.
பயமாயிருக்கிறது
என் தோட்டத்தில் பூத்துக்குலுங்குகிறது
நீலநிறப்பூக்களும்
சில புடலங்காய்களும்.

சாத்தியங்கள்





















ஒரு மது உங்களுக்கு
என்னவெல்லாம் வழங்கக்கூடும்?
உத்திரவாதவமான அரைமணிநேர போதை
எழும்பாக்குறி
இலக்கியச்சண்டை
கருத்துப் பகிர்தல்கள்
சில பாடல்கள்
முலைகள் குறித்த தீவிர உரையாடல்கள்
கண்ணீர்த்துளிகளின் நெகிழ்வு
சில கொலைகள்
அல்லது
சில
அல்லது
பல
தற்கொலைகள்
சமயங்களில்
கவிதை, ஓவியம்
மற்றும் வியாபாரத்திற்கான
முன் திட்டங்கள்
உறுதிமொழிகள்
தீர்மானங்கள்
கெட்டவார்த்தைகள்
பிரம்பு
அல்லது குண்டாந்தடி
அல்லது கொலைவாள்
ஒரேபெயர் சொன்னால்
ஆயுதம் அல்லது அதிகாரம்
வசைபாடல்
தன்னைநிறுவல்
சில நேசங்களின் இழப்பு
இதயங்களின் மீதான
காயங்கள் பரிசளிப்பு
மறுநாளைய மன்னிப்பு

பொழுதிடை தெரியின் பொய்யே காமம்











ஒரு மலையில் உலவிக்கொண்டிருந்தேன்.
மேகம் தவறிப்போய்
மடியில் விழுந்தது.
நினைத்திருந்தேன் மேகம்
பஞ்சுப்பொதிபோலவும்
குழந்தையின் உள்ளங்கை போலவும்
மென்முலை போலவும் இருக்குமென்று.
மேகமிருந்தது மேகமாய்...

அன்னியம்


















இருளற்று எதுவுமில்லை
ஒளி குறித்த புரிதலில்லை.
சுற்றிலும் ஈரம்
தொப்புள்கொடியின்றி
துணையில்லை.
பூமியில் கால்பதித்த கணம்
காலுதைத்து
காலுதைத்து
வீறிட்டழுகிறேன்
அன்னியமும்
பயமுமாயிற்று
இருள்
ஈரம்
தனிமை.

நெஞ்சொடு கிளத்தல்













பாம்புகள் புரளும் படுக்கையில்
புரண்டுபடுக்காதே, ஏதேனும்
பட்டாம்பூச்சிகள் சாகக்கூடும் யதி.
கடற்கரையின் மணல்பரப்பில்
பதிந்திருந்த காலடிச்சுவடுகளை
மட்டுமே கணக்கெடுக்கிறாய்
உடைந்துசிதறிய நத்தையோடுகளை
என்ன செய்யலாம் யதி?
கைகள் கோர்த்துத் திரிந்த
கடற்கரையில்லையிது.
எப்போதோ தட்டுத்தடுமாறிய
ஒரு பாய்மரக்கப்பல்
கரைசேரத்தவித்ததொரு கரை.
நினைவிழந்து சிதறியநாட்களில்
உனது அலை சற்றேனும்
எனை நனைத்துச்செல்லவில்லை.
வன்மத்தின் கொலைநாட்களில்
யாருமற்று விசும்பியநாட்களிலும்
உனதுகடலை உன்
ஜன்னலைத் தாண்டிப் பாய
அனுமதிக்கவில்லை.
எங்கோ என் பிணம் மீதேறி
நடந்துசென்றவனின் கண்ணீர்
கடலாய்ப் பாவிப்பரவுகிறதா யதி?
நம்பமுடியவில்லை
நீ என்னைக் கைவிட்டுச்சென்றுவிட்டாயென.
உன் ஆறுதல்
உன் எழுத்து
உன் புன்னகை
உன் கண்ணீர்
இப்படியான உனதுகள்
எனக்கு அருளப்படாதபோதும்
அது என்னிடமிருந்து பறிக்கப்பட்டதையும்
சிரித்துக்கொண்டே நீ காறியுமிழ்ந்ததையும்.
ஆனால் இன்னமும் நம்பமுடியாதைவைகளின்
பட்டியல்களை விவரிப்பததெதற்கு யதி?
உன்னைப் பிரிகிறேனென்னும் நினைப்பே வலிக்கிறது.
ஆனால் உன்னோடிருப்பது அதைவிடவும்...

உறக்கத்தின் மீது படர்ந்து..














புதிதாய் எதுவும் சொல்லப்போவதில்லை
புதிதாய்ச் சொல்ல ஒன்றுமில்லையும்கூட.
மீண்டும் மீண்டும்
அடித்தடித்து எழுதப்படுகின்றன பிரதிகள்.
மரங்கள் தங்கள் கனிதவிர்த்து
வேறெதுவும் தருவதில்லை.
ஸ்வஸ்திக் இருள்சூழ்ந்த பிரேதேசத்து இருட்டில்
கதவினிடுக்கின் வழியாய்க் கசிந்த வரிகள்தான்.
நீங்கள் உறங்குகிறீர்கள்..
போபாலில் மூச்சடைத்து இறந்துபோன சிசு
குஜராத்தில் ஓம் செதுக்கப்பட்ட நெற்றிகள்
கயர்லாஞ்சில் பிறப்புறுப்பில் செருகப்பட்ட வாட்கள்
செந்தூரம், தலைப்பாகை, மீசைத்திமிர், லத்திவெறி
இவையேதும் அறியாது உறங்குவது நல்லதே.
உறங்குவது நல்லதுதானே
உங்கள் கதவுகள் தகர்க்கப்படாதவரை

என்னதாண்டா பெப்சியில இருக்குதப்படி? - அதுக்கு எருமைமாட்டுமூத்திரத்தைக் கப்பில குடி















நூற்றாண்டுகளைக் கடந்துவந்திருக்கிறீர்கள்
மீண்டும் திரும்பிப்பார்க்கத் தயாராயில்லாமலேயே.
நியாயம்தான்
கடந்துவந்த நூற்றாண்டுகளின்
ஓலம், அழுகை, கண்ணீர்,
புழுதி, ரத்தம், நிணம்,
வியர்வை என எதுவும் இப்போது தேவையில்லைதான்.
இப்போது சாதரணமாய்க் காணவியலும்
ஒரு புரோட்டாவைக் கொத்தித்தின்று
ஒரு மிடறு பெப்சியருந்துமிளைஞனை.
உங்கள் உற்சாகமான இரவுகளிலும்
விரும்பப்படும் மதுவின்
விரும்பப்படா மணருசி மறைக்க
கலக்கவும் கூடும்.
எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா
அதன் நிறம்
கருக்கலைந்த தாயின்
உதிரத்தின் நிறமொத்திருப்பதை.

பிணங்களின் விலை விசாரித்து...















நீங்கள் இப்போது ஒரு
புதிய அங்காடிக்குள் நுழைந்திருக்கிறீர்கள்..
புதிய அனுபவத்திலும்கூட.
நகரப்பேருந்துகளில்
சகமனிதர் கக்கங்களையே நுகர்ந்த உங்களுக்கு
குளிர்மையோடு
இதுவரை நுகர்ந்தறியா மணமும்
அளிக்கப்படுகிறது.
ஒருகுழந்தையைத் தொடுவதைப்போலவே
புத்தம்புதுக் காய்கறிகளை வருடுகிறீர்கள்.
வெளியே வந்தவுடன்
மீண்டும் முகத்திலறைகிறது
மதியவெய்யிலின் வெம்மையும்
பேருந்துகுறித்த பயமும்.
மறந்திருந்த கணங்களில்
உங்களால் உணரமுடிந்ததா
நீங்கள் வருடியவை
குளிர்பதனப்பெட்டியிலிருந்த பிணங்களென்பதையும்
குளிர்மணத்திற்கிடையிலும் வீசியது
நீங்கள் தவிர்க்கவிரும்புகிற
அதே கக்கங்களின்
கிராமத்து வாசனை என்பதையும்...

நட்சத்திரங்களிலிருந்து வழியும் சீழ்




















ஒரு மதுச்சாலையோடு
முடிந்திருக்கவேண்டிய வன்மம்
இறுதியாய் வீட்டின்
நடுக்கூடத்திற்கே வந்தது.
சன்னலைத் திறக்கும்போதெல்லாம்
கொலைவெறிபற்களின் பிம்பத்தில்
உடைந்துநொறுங்குகின்றன
முகம்பார்க்கும் கண்ணாடிகள்.
பனிபெய்து வெளுக்கும்
சாலையெங்கும் மலங்கழித்துப்போனாய்.
மேற்குவானத்தினின்று உதிர்ந்த
பெயர் தேவைப்படாத நட்சத்திரம்
ஒரு குழந்தையாய்ப் பிறந்ததாய்ப் பேசிக்கொள்கிறார்கள்.

சிறுநீர் கழித்த தடயம்





















பலராலும் எச்சில்படுத்தப்பட்ட
சொல்லொன்றே
எனக்குப் பெயராய்
இடப்பட்டிருக்கிறது.
பறவைகள் கூடுதிரும்பும் சாயங்காலப் பொழுதொன்றில்
எவராலும் அழைக்கப்படாத பெயரை
எனக்கு நானே சூட்டிக்கொள்வேன்.
ஒரு சொல்லே
நானாய் உணரப்படும் கணம்
ஒரு தீக்குச்சியின் முனை
கருகிய வாசம்.

சிறுநீர் பெய்த தடயம்






















பலராலும் எச்சில் படுத்தப்பட்ட
சொல்லொன்றே
எனக்குப் பெயராய்
இடப்பட்டிருக்கிறது.
பறவைகள் கூடுதிரும்பும் பொழுதொன்றில்
எவராலும் அழைக்கப்படாத
பெயரை எனக்கு
நானே சூட்டிக்கொள்வேன்.
ஒரு பெயராய் நான்
உணரப்படும் கணம்
தீக்குச்சியின் முனை கருகிய
வாசத்தை
உணர்ந்து தீர்கிறேன்.

இறுதியுணவு
























தேவன் விதைப்பதுமில்லை: அறுப்பதுமில்லை
பறவைகளே தேவனுக்கான
உணவை வழங்கின.
காலுதிரம் நக்கி
உயிர்த்த காலத்திலும்
ஒரு அப்பம் பகிர்ந்தானில்லை.
பறவைகள் அற்றுவீழ்ந்த
காலத்தின் கடைசிநாளில்
தேவனுண்ட கடைசித்
தானியத்தில் எழுதப்பட்டிருந்தது
ஒரு புறாவின் பெயர்.

உதைதின்ன ஆரியச்சூத்து


















நீலத்தின் விஷம்பாரித்துக்கிடக்கும்
வெளிகளை
அலசி வெளுக்கும் கறுப்பு.
சம்புகனின் வன்மம்
இளஞ்சூட்டாய் ஏறும் நாளில்
அறுந்துவீழ்கின்றன காவிக்கொடிகள்.
வரலாறுதோறும் எக்காளச்சிரிப்புதிர்த்த
ஆரியக்கூத்தின் கதைமுடிந்து
உதைதின்னு வீங்கியது ஆரியச்சூத்து.
நேற்றுமுதல்நாள் பாலத்தில்
சீதை தூமைதுடைத்த
ராமப்பிரதிகளை
மலம்துடைக்கத்
தொடங்கியிருக்கின்றன
கிழவனின் மடிவளர்ந்த வாரிசுகள்.
எப்போதும் வாலில் பற்றிய தீ
இலங்கையையே எரிக்குமென்னும்
வரலாற்றுமிதப்பு முடிகிறது.
வாலறுந்த வானரங்களுக்கு
இறுதியாய்ச் சொல்லவிரும்புவது இது
ராமனும் குறியிழந்து கிடக்கிறான்,
தயவுசெய்து வாயை எடு.

மழைத்தல்




யாரும் ரசிக்கவில்லை.
மழையை ரசிக்கிறது மழை
நிர்வாணம் ரசிக்கும் உடல்போல.
நிர்வாணமாய்த்தான் பெய்கிறது மழை.
ஆடை நனைகிறதென்று
அலுத்துக்கொள்கிறாய் சகி.
------------------------------------------------

பெய்யெனப் பெய்யும் மழை
கவிதையின் சுதந்திரம்.
பெய்யெனப் பெய்யா மழை
மழையின் சுதந்திரம்.

மாம்சம்



" வார்த்தைகளே மாம்சங்களாகவும்
மாம்சங்களே வார்த்தைகளாகவும்
மாறித்திரியும் நிலப்புலத்தில்
சிந்திச் சிதறிக்கிடக்கும்
மாம்ச மற்றும் வார்த்தைத்
துண்டுகளை என்ன செய்வது அதீதா?"

"மனிதர்கள் யாருமற்ற
வனாந்திரங்களில்
பூக்கும் பூக்களே
அழகாயிருக்கின்றன கலாபன்"



" வண்ணத்துப்பூச்சிகள் சிறகுதிர்க்கும் ஒரு மாலைப்பொழுதில் உன்னைச் சந்திக்கும்போதெல்லாம் எப்போதும் மழையை நினைவுபடுத்துகிறாய், அதீதா"

"உன் புயங்களிலிருந்து உள்ளங்கைகளுக்குப் பரவும் நடுக்கத்தை உணர்ந்தால் நீ சொல்வது உண்மைபோலத்தான் தோன்றுகிறது கலாபன்"

"பூனைக்குட்டிகளைப் பதுக்கிவைத்திருக்கும் உன் மார்புக்கூட்டுக்குள்ளும் சமயங்களில் மழையின் ஓசையை உணர்கிறேன். நீ பூனை மாமிசம் உண்டிருக்கிறாயா அதீதா?"

"என்ன இது, கனவில் கொலை நிகழ்த்துதல்போல. பூனை என்பது மென்மையின் சதை, பட்டுக்கன்னங்கள், குழந்தைகள்"

"முயல் மாமிசமாவது சாப்பிட்டிருக்கிறாயா?"

"ம். முயல்மாம்சம் மெதுமெதுப்பானது மட்டுமல்ல, வெதுவெதுப்பனதும் கூட. என் அடிவயிற்றுக்குள் கதகதப்பான வெப்பம் பாவுவதை உணர்ந்திருக்கிறேன். சமயங்களில் யோசிப்பேன், இந்த முயல் எத்தனை பச்சைப்புல்லைப் புசித்திருக்குமென்று. முயலை உண்னும்போது நானே பசும்புல்லாகிறேன், சமயங்களில் வனமாகவும்"

"சிரிப்பதைத் தவிரவும் வேறு வழியில்லை அதீதா, மேல்தோலை உரித்துவிட்டால் பூனைமாமிசமும் முயல்மாமிசமும் ஒன்றுதான்"

'நீ ஏன் இப்போது மாம்சம் பற்றிப் பேசுகிறாய்?"

"தெரியவில்லை. ஆனால் சமீபமாக என் கனவின் அறைகளில் மாம்சத்தின் வாசனை கமழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு மழைநாளின் மறுநாளில் தயாள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தாள், என் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு நான் உண்மையாக இருப்பதில்லையென்றும் யார்மீதும் மரியாதை செலுத்துவதில்லையென்றும். கூடுதலாய்ச் சொன்னாள் என்னை நினைக்கும்போதெல்லாம் குத்துச்சண்டைக்காரனின் பிம்பமே விரிவதாய். நான் இப்படியாகப் பதில் அனுப்பினேன், 'நான் நரமாமிசம் சாப்பிடுபவனில்லை நம்பு' என்று"

"தயாளுக்கும் மாம்சம் பிரியமோ?"

"இல்லை. அவள் ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லை. மாமிசம் உண்ணாதவர்கள் மீது எனக்கு மரியாதையில்லை அதீதா. மாமிசம் உண்ணப்படாத ஞாயிறு தன் பெயரின் அர்த்தத்தை இழக்கிறது"

"எப்போதிலிருந்து மாமிசம் உனக்குப் பரிச்சயம்?"

"என் பன்னிரண்டாவது வயதில். முதல் பரிச்சயமாமிசம் மாட்டிறைச்சி. ஒரு தலித்தாகவும் முஸ்லீமாகவும் பிறப்பதற்கான பேறுபெற்றிலன் நான். ஆனாலும் வறுமை எனக்கு மாம்சமாய் மாட்டுமாமிசத்தையே அறிமுகப்படுத்தியது. ஒரு முஸ்லீம்குடும்பம்தான் எங்கள் குடும்பத்தைப் பராமரித்துவந்தது. மாட்டுமாமிசத்திலேயே அழகானதும் சுவையானதும் உப்புக்கண்டம். மூன்றுநாட்கள் கொடியில் காயும் உப்புக்கண்டம் நான்காம்நாள் தன் சாற்றில் ருசி ஊற்றியிருக்கும். மாட்டுமாமிசம் உண்ணக்கூடாது என்பவர் யாராயிருந்தாலும் மரியாதையாக இந்த நாட்டைவிட்டு வெளியேறுவதே மானமுள்ள காரியமாகும் என்கிறார் பெரியார். பின்னாளில் ஒரு அரசியல் கூட்டத்துண்டறிக்கையில் 'கோமாதா விருந்து உண்டு' என்று அச்சிட்டதற்காக உளவுத்துறையின் கண்காணிப்பிற்கு ஆளானேன் அதீ"

" கலாபன், நீ உரையாடலின் சமநிலையைக் குலைக்கிறாய். திடீரென்று எதார்த்தத்திற்குத் தாவுகிறாய், அரசியலும் பேசுகிறாய்"

"மீண்டும் சிரிக்கத் தூண்டுகிறாய். எதார்த்தமே அரசியலாயும் அரசியலே எதார்த்தமாயும் இருக்கிறது போலும். நீ விரும்பிப் புசிக்கும் முயலைப்போலவே வளைக்குள் பதுங்க முனைகிறாய்"

"நீ ஏன் என்னைத் தரையிறக்குகிறாய்? உன் காமமே மாம்சவேட்கையாய் மாறுகிறது கலாபன். நீ விரும்பிச்சுவைக்கும் என் இதழும் மார்பும் கூட மாமிசம்தானே?"

"இருக்கலாம். ஆனால் உன் கண்களை அப்படிச் சொல்லமுடியாது. அது சதைக்கோளங்களினின்று நழுவி ஓடுவது, வான், வெளி, பிரபஞ்சம் போல முடிவிலி உன் கண்கள். உன்னுடலின் உயிர்ப்புள்ள ஒரே பகுதியும்கூட"

"அப்படியானால் இப்படிச் சொல்லலாம், கண்கள் என்பவை பாதரச மாமிசம்"

"தெரியவில்லை. எனக்கு ஒரு முத்தம் தரமுடியுமா?"

"இல்லை, முடியாது. அதற்கான மனநிலை இல்லை. புத்தன் கடைசியாய்ப் புசித்த பன்றி மாமிசம் இருக்கிறது. பகிர்ந்துகொள்வோம்"

- தொடரும்.....

தார்வீஷை நெருங்கும் மரணம்


தார்வீஷ்
இனி உன் கவிதைகளில்
கண்ணியம் பேணு.
நீயினி தெருக்களில் இறங்கிக் கோஷமிட முடியாது.
ஒரு போலிஸ்காரனிடமும்
உதைவாங்கமுடியாது.
உனக்கான நாளை
நீ கொண்டாடமுடியாது.
உன் ஆடைகளைத் திருத்திக்கொள்.
சீக்கிரம் கிழிந்த பட்டன்களைத் தைத்துவிடு.
உன் மீது ஏறிச்
சுழலப்போகிறது பூமி.
உனக்குக் கிடைக்கும் வெகுமதியெல்லாம்
சில முத்தங்கள்,
உச்சமுற்றோ உச்சமற்றோ புணர்ச்சி
சமயங்களில் மடியில் கிடந்து அழும் ஆறுதல்
சமயங்களில் மடியே பிரச்சினையாகி
ஆறுதலுக்காய் அலையும் இருப்பு
சில குழந்தைகள்
காண்டம்
பால்பாக்கெட்
ஆஸ்பத்திரியின் மருந்துநாற்றம்
ரேஷன்கார்டு
ஸ்கூல் அட்மிஷன்
பனியாரக்குடம்
அவ்வளவே.
இனி தாமதமாய்த் திரும்பும்
ஒவ்வொருநாளும் விசாரிக்கப்படுவாய்.
உனது உடலின் வாசனை முகரப்படும்.
பொருப்பற்றுக் கவிதை எழுதமுடியாது.
மரணம் உன்னை நெருங்கிறது தார்வீஷ்.
அதற்குள்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு குடி
எவ்வளவு முடியுமோ
கவிதை எழுது.
அவகாசம் குறுகியது தார்வீஷ்.
சீக்கிரம் உன் இயற்பெயரை ஞாபகப்படுத்திக்கொள்.

இரக்கமற்றுப் பெய்யெனப் பெய்யும் மழை




ஒரே ஒரு தொடுதல்
கிளர்த்தியிருக்கலாம்
உன்னுள் புதைந்துபோன வசந்தங்களை.
ஒரே ஒரு சொல்
மலர்த்தியிருக்கலாம்
நீ மறைக்க விரும்பும் உன் பொய்களையும் தாண்டி.
ஒரே ஒரு பார்வை
உன் இறுகிய நிலத்தை நெகிழ்த்தியிருக்கலாம்.
எங்கோ பெய்கிறது மழை
பாலத்திணைகளைத் தவிர்த்து.
ஒரே ஒரு முறை
மலைமுகடுகளில் எதிரொலித்து
அடங்கிப்போனது
ஒரு நாடோடியின் பாடல்.

ஒரு கம்யூனிஸ்டாயிருப்பதன் அர்த்தம்







உனக்கு அவன் உவப்பாயில்லாதிருக்கலாம்.
சமயங்களில் எப்படியாவது அவன்
கண்டுபிடித்துவிடுகிறான்
இருட்டுமூலையில் நீ
தொலைத்த மனசாட்சியை.
அவனது கேள்விகள்
உன் கழுத்துக்குக் கீழே
நீள்வதும் உனக்கு எரிச்சலையூட்டலாம்.
எனக்கும் அவனோடு
கைகுலுக்குவதில் தயக்கமிருக்கலாம்.
ஆனால் அவனது நீட்டிய
கரங்கள் எதற்கானவை
என்ற சந்தேகமில்லை
என்னிடம்.
அவன் ஒரு கம்யூனிஸ்ட்.
கம்யூனிஸ்டாயிருப்பதன் அர்த்தம்
மனிதனாயிருப்பதன் அர்த்தம்தான்.
உன்னையும் என்ன்னையும் புறக்கணித்துச்
செல்லும் குரல்கள்
உரக்க இல்லை என்றாலும்கூட
சன்னமாகவேனும்
என் மனசைத் தொட்டு
மீண்டு எதிரொலிக்கிறது,
'கஷ்டஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்ட்கள்
கம்யூனிஸ்ட் ஹம்
ரா ஹம்ரா கம்யூனிஸ்ட்'.

தனித்திருக்கும் பறவை





வானற்று ஏதும் அறியாது பறவை.
பறவைக்கு ஒரே வான்.
வானுக்கோ பறவைகளில் ஒன்று.
வான் என்பது விரிந்தது
என்றது பறவை.
இறுதியில் தெரிந்தது
வான் என்பது விரிந்த வெளி...
விரிந்த ஒன்றுமற்ற வெளி.
இப்போது பறவை பறக்கிறது
வானைத்தாண்டி.

துப்பாக்கிகளை புதைத்து
துப்பாக்கிகளை விதைத்து
துப்பாக்கிகளை அறுவடை செய்யும்
துப்பாக்கிதேசத்தில்
எப்போதேனும் பெய்கிறது மழை
நீராய்
ரத்தமாய்
உடல்களாய்
சொற்களாய்
கண்ணீராய்......

ஒரே பதில்

ஏன் காதல்கவிதைகள் எழுதுகிறாய்
என்றுகேட்கிறாள் ஒரு அரசியல்தோழி.
உண்மையில் அவள் கேட்கவேண்டியது
ஏன் நீ கவிதைகள் எழுதுகிறாய்.
ஏன் அரசியல் கவிதைகள் எழுதுகிறாய்
என்று கேட்கிறாள் காதல்தோழி.
அவள் கேட்கவேண்டியதும் அதுவே.
ஆனாள் அவள் கூடுதலாய்க் கேட்டது
ஏன் கவிதைகளில் கோப்படுகிறாய்.
எனக்கு ஆத்திரம் வருகிறது
மூத்திரம் வருகிறது
சமயங்களில் கவிதையும்

மறுப்பின் அழகு























நீ மறுப்பைச் சொன்னாய்.
அதை அழகாய்ச் சொன்னாய்.
அழகாயிருப்பதால்
அது மறுப்பில்லை என்றாகுமா?
நீ உன் மறுப்பைவிடவும் அழகானவள்.
உன் கண்கள் உன்னை விடவும் அழகானவை.
விலக்கப்படமுடியாதவையுன் கண்கள்.
சமயங்களில் என் கவிதை தற்கொலை
செய்துகொள்ள நேர்கிற இடமும் அதுவே.
நீ கண்களில் விழுங்கி
வார்த்தைகளில் உமிழ்கிறாய்.

தொட்டிமீன்











இன்னும் எத்தனைகாலம்
உன் அம்மா தலைவலிக்கு
தைலம் தேய்த்த கதையைச் சொல்வாய்.
கருப்பையோடு சுருங்கிவிட்டதுன் உலகம்.
நீ வாசலுக்குத் திரும்பு
அல்லது கதவை உடை
அல்லது முடி களை
அல்லது கடிதம் கிழி
அல்லது நகம் நறுக்கு
அல்லது....

இறுதி ஊர்வலத்தின் ஞானம்




இறக்கைகள் தவிர்த்து வண்ணத்துப்பூச்சியை
யோசிக்கமுடிவதில்லை நம்மால்.
இறக்கைகளற்ற வண்ணத்துப்பூச்சிகளை
நேசிக்கவும் கூடுவதில்லை.
முந்தாநேற்று பார்த்தேன்
இறந்துபோன வண்ணத்துப்பூச்சியைச்
சுமந்துசென்ற எறும்புகளுக்கு
இறக்கைகள் முளைத்திருந்தன.

நீயும் நானுமில்லாத நாளில்...




நீயில்லாத நாளில் நானும்
நானில்லாத நாளில் நீயும்
இருந்திருப்பது சாத்தியம்தான்.
அது நீயும் நானும்
அறியப்படாத காலம்.
நீயும நானுமில்லாத நாளிலும்
இருக்குமிந்த இவ்வுலகம்.
அது உனக்கும் எனக்குமற்ற உலகம்.
ஆயினும் உலகம்.

புவனேஸ்வரி என்னும் விலைநிலக்குறிப்பு




புவனேஸ்வரியின் தேகம் உலர்ந்தது
வறண்ட நிலம்.
முதலில் புவனேஸ்வரியிடம் வந்தது சங்கரன் அய்யர்.
எல்லாம் களைந்தபின்னும்
முதுகில் புரண்டு சிரித்தது பூணூல்.
இரண்டாவதாய் வந்தவன் ஷ்யாம், கணிணி நிபுணன்.
அவனது புணர்தல்
கம்யூட்டர் புரோகிராமிங் போலவே இருந்ததாய்ப்
புவனேஸ்வரி சொல்லியிருந்தாள்.
கடைசியாய் வந்த கவிஞனோ
போதியின் மிகுதியால் புணராமலே
படுத்து உறங்கியபோதுதான்
தெற்குமூலையில்
ஒரு குழந்தையின் ஆர்வத்தோடும்
பூ மலர்வது போலவும்
குண்டு வெடித்துச் சிரித்தது.
இப்போது சங்கரனில்லை
ஷ்யாமும் கவிஞனுமில்லை.
சங்கரன், ஷ்யாம், கவிஞனுக்கிடையில்
இடைப்பட்ட நேரத்தில்
கடவுளும் வந்துபோனதாய்ச் சொன்னது
புவனேஸ்வரியின் பிரேத அறிக்கை.

அழுதலின் நிறம்






சாம்பல்நிறக்கனவொன்றில்
கைவிடப்பட்ட வார்த்தைகள்
உன்னிடம் அழைத்துவந்தபோது
நீ பச்சை ஆடை உடுத்தியிருந்தாய்.
உன்னைச் சுற்றிலும்
வயலெட் நிறத்தில்
மழைபெய்துகொண்டிருந்தது.
வெளிர்மஞ்சள் குடையை
மூலையில் கிடத்தி
பிங்க்நிறக்கதவைத்
திறந்து என்னருகே வந்து
என் பழுப்புத் தலைமுடியைக்கோதி
கையழுத்தி,
'நான் உன்னைப் பிரிகிறேன்' என்றாய்.
இப்போது மழை நின்றிருக்கிறது
கதவு அடைத்திருக்கிறது
கனவு உதிர்ந்து
என்னைச் சுற்றிலும் சாம்பல்.

சாத்தியங்களின் மரணம்



சாத்தப்பட்டுக்கிடக்கின்றன கதவுகள்.

ஒலியெழுப்பி உரக்கத்தட்டாதிருக்கட்டும் உங்கள் கரங்கள்.

ஏற்கனவே தென்றலொன்றுநுழைந்ததன்

சாட்சியமாய்ப்பூவொன்று

கலைத்துப் போடப்பட்டிருக்கிறது.

இன்னொருமுறையும்தென்றல் உள்நுழையலாம்.

கட்டிடத்தின்விரிசல்

இடுக்குகளெங்கும்வேர்விட்டுத் தலைநீட்டி...

உதிர்வதற்காகவேகாத்துக்கிடக்கின்றன

பூக்கள்.

சாத்தியங்கள் மரணிக்கும்

ஒரு கொடுமழையின் பின்னிரவில்

இடிந்துகொண்டிருக்கிறது வீடு.

எப்படியிருந்தாலென்ன கதவுகள்...

மூடப்பட்டோ சாத்தப்பட்டோ...

கருப்பையின் ஞாபகத்தோடேயே...


நான் இறந்துவிடுகிறேன்

என்னை உன்

உள்ளங்கையில் புதைத்துவிடு.

வெளியில்......



முதல்நாள் சந்தித்தநீ

இல்லை நீ.

நீ முதல்நாள்

சந்தித்தநானுமில்லை நான்.

யாருமிங்குமில்லைமுதல்நாள்

சந்தித்த யாருமாய்.

சூரியனை விழுங்கிய

அலைகரைதட்டிப் போகிறது.

காத்திருப்போம் நாம் இனி வரும்

முதல்நாளுக்காகவும்

எதிர்ப்படும் முதல்நபருக்காகவும்.

சுழல்...



தொடங்கும்போதே முடிவுக்கு
வந்திருந்தது நம்
உரையாடல்.
இனி ஏதும் மிச்சமில்லை
அவரவர்
மொழிகளைப்
பத்திரப்படுத்துவதைத் தவிர.
நீ.....ண்டவெளி சுருங்கி
ஒற்றைப்புள்ளியாயிற்று.
இப்போதுசொல்
இந்தப்புள்ளியிலிருந்து
தொடங்கலாமா நம் உரையாடலை?

அன்பு நண்பர்களுக்கு....



கடந்த இரண்டரை வருடங்களாக 'மிதக்கும்வெளி' என்னும் வலைப்பக்கத்தின் வழியாக உங்களோடு உரையாடிவந்தேன். ஆனால் சமீபகாலமாக அப்பக்கத்தில் பதிவு எதையும் பதிவிட முடியவில்லை. பிளாக்கர்.கொம் என்னுடைய பிளாக்கை 'ஸ்பாம் பிளாக்' என்று அடையாளம் கண்டிருப்பதால் பின்னூட்டங்களை வெளியிட முடிகிறதேயல்லாது பதிவிட முடியவில்லை. இதன் பின்னணியிலிருப்பது பார்ப்பனச்சதியா, ஏகாதிபத்தியச்சதியா, பில்லிசூனியமா என்று தெரியவில்லை ((-. எனவே கீழ்க்கண்ட மூன்று வலைப்பக்கங்களின் வழியாக உங்களைச் சந்திக்கலாமென்றிருக்கிறேன்.
உரையாடுவோம்.


பிரியங்களுடன்...
சுகுணாதிவாகர்.