ஏதோ எழுதத்தோன்றுகிறது.
என்ன எழுதுவதென்றுதான்
தெரியவில்லை.
இன்னமும் இருக்கிறது
ஏதேனும் எழுதிவிடுவேனோ
என்னும் பதட்டம்.
இப்படியே இருக்கவேணும்.
Posted by சுகுணாதிவாகர் at 1 comments
Homonculus அல்லது (லக்கிலுக், உ.தமிழன் போன்றவர்களுக்குப்) புரிகிறமாதிரி ஒருகவிதை
எனக்குள் நீ
உனக்குள் நான்.
எனக்குள்ளிருக்கும்
உனக்குள் நான்.
உனக்குள்ளிருக்கும்
எனக்குள் நீ.
எனக்குள்ளிருக்கும்
உனக்குள்ளிருக்கும்
எனக்குள்ளிருக்கும்
உனக்குள்ளிருக்கும்
நான், நீயெனில்
எனக்கும் உனக்கும்
ஏது இடைவெளி?
Posted by சுகுணாதிவாகர் at 22 comments
புணர்ச்சியைப் பற்றிய நான்கு கவிதைகள்
இரவு ஒரு வேசியைப்போல
அவிழ்கிறது
என்கிறான் இவன்.
வேசி ஒரு இரவைப் போல
அவிழ்கிறாள் என்று
திருத்தினேன் நான்.
------------
மிஸ்டர் எக்ஸ் மிசஸ் எக்ஸைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
(மிசஸ் எக்ஸ் மிஸ்டர் எக்ஸைப் புணர்வதாய்ச் சொல்வது வழக்கமில்லை)
மிஸ்டர் எக்ஸ் மிசஸ் ஒய்யை நினைத்து
மிசஸ் எக்ஸைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
மிசஸ் எக்ஸ் மிஸ்டர் ஒய்யை நினைத்து
மிஸ்டர் எக்ஸுடன் இருக்கிறாள்.
இப்போது படுக்கையறையில்
நான்குபேர் புணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
--------------
புணர்ச்சியைப் பற்றி நூறுகவிதைகள்
எழுதியவன் ஒருமுறைகூட புணர்ந்ததில்லை.
புணர்ச்சிபற்றிப் பேசக்கூடாதென்பவன்
புணர்ந்ததோ லட்சம்தடவைக்கும் மேல்.
புணர்ச்சிபற்றிப் பேசாது புணர்ந்தவனைக்
கவிதையைப் போலப் புணர்ந்தான் என்பதா,
புணராமலே புணர்ச்சிபற்றி எழுதியவனை
கவிதையைப் புணர்ந்தவன் என்பதா?
-----------
நன் இந்தவீட்டில் இவளைப் புணர்ந்துகொண்டிருக்கிறேன்.
அவன் அடுத்தவீட்டில் அவளைப் புணர்ந்துகொண்டிருக்கிறான்.
எங்களிருவர் வீடுகளுக்குமிடையில் சுவர்களிருக்கின்றன.
எங்களிருவர் வீட்டின் சுவர்களுக்குள்ளும் அறைகளிருக்கின்றன.
நான் இவளைப் புணர்வதும்
அவன் அவளைப் புணர்வதும்
எங்களிருவருக்குமே தெரியும்.
ஆனாலும் எங்களிருவரின்வீட்டில்
சுவர்களுமிருக்கின்றன..
அறைகளுமிருக்கின்றன.
Posted by சுகுணாதிவாகர் at 10 comments