கனவின் குருதி
























வெறும் கணம்
இப்போது
உன்முன்னும் என்முன்னும்.
மணலில் ஒளியும் நண்டுகள்போல
வார்த்தைகள் மறைந்தன.
கானகத்தின்
அடர் இருளில் தொலைவதற்காகவே
என்னை வந்தடைந்தாய்.
என் மார்பு ரோமங்களில்
பூப்பூக்கும் நாளில் வா
நிலவை உண்போம்.